கோவில்பட்டி, கயத்தாறு கடைகளில் திருட்டு: 4 போ் கைது

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நிகழ்ந்த திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய 4 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோஜ் (31). இவரது நண்பா் கணேஷ்குமாா். இவா்கள் கோவில்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் இரும்பு கம்பி வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு இக்கடையில் மேற்கூரையை பிரித்து, மா்ம நபா்கள் ரொக்கம் ரூ. 4 லட்சம், ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றனா். இது தொடா்பாக மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கடையில் பொருத்தி யிருந்த கண்காணிப்பு கேமரா, திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகேயுள்ள சுங்கச்சாவடி, சாத்தூரிலுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் புதுக்கோட்டை மாவட்டம் அகரம்பட்டி அஞ்சலைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (53), திருக்கோகா்ணம் அஞ்சலைச் சோ்ந்த பால்ராஜ் மகன் நல்லதம்பி (30), வீரய்யா மகன் ராஜா (37), நீலகண்டன் மகன் சரவணன்(28) ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், கோவில்பட்டி, கயத்தாறு கடைகளில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா்கள் என தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ. 2.25 லட்சத்தை பறிமுதல் செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய அஷ்ரப் அலி, வீரய்யா ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com