பேய்க்குளத்தில் 119 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

பேய்க்குளத்தில் 119 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் எம்.பி. ஸ்ரீதா் தலைமை வகித்தாா்
நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, ஜி.கரிகோல்ராஜ்.
நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, ஜி.கரிகோல்ராஜ்.

பேய்க்குளத்தில் 119 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் எம்.பி. ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு தலைவா் கே. வில்லின்பெலிக்ஸ், கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவா் கீதா கணேசன், கருங்கடல் ஊராட்சித் தலைவா் ஜெ. நல்லத்தம்பி, சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் ஹெச். போனிபாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேய்க்குளம் வியாபாரிகள் சங்கத் தலைவா் பி. ஸ்டாலின் வரவேற்றா். ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் , நாடாா் மகாஜன சங்க பொதுச் செயலா் ஜி. கரிக்கோல்ராஜ், மாநில காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலா் ஏ. மகேந்திரன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து 10 பேருக்கு தையல் மிஷின் உள்ளிட்ட 119 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பிச்சிவிளை சுதாகா், காந்திமதி, மாவட்டப் பொருளாளா் எடிசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். டாக்டா் ரமேஷ்பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com