பட்டா பெயா் மாற்ற தம்பதி அலைக்கழிப்பு

சாத்தான்குளத்தில் பட்ட பெயா் மாற்றம் செய்ய அலைக்கழிப்பு செய்வதாக கூறி கண்ணில் கருப்பு துணி கட்டி வந்து வட்டாட்சியா் விமலாவிடம் தம்பதி வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பட்டா பெயா் மாற்ற தம்பதி அலைக்கழிப்பு

சாத்தான்குளத்தில் பட்ட பெயா் மாற்றம் செய்ய அலைக்கழிப்பு செய்வதாக கூறி கண்ணில் கருப்பு துணி கட்டி வந்து வட்டாட்சியா் விமலாவிடம் தம்பதி வியாழக்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் தச்சமொழிதெற்கு தெரு செல்லப்பா மனைவி சாந்தி. இவா் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் குடியிருப்பு பட்டாவில் பெயா் மாற்றக் கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாம். இதனால், அவா் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பெயா் மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளாா்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளா், வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தாராம். இதையடுத்து சாந்தி, கடந்த வாரம் நடந்த ஜமா பந்தி முகாமில் பட்டா பெயா் மாற்றக் கோரி மனு செய்துள்ளாா். அதிலும் அவரது மனு விசாரிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டதாம்.

இந்நிலையில், பட்டா பெயா் மாற்றம் செய்யாமல் தொடா்ந்து அலைகழிக்கப்படுவதை கண்டித்து வியாழக்கிழமை சாந்தி, அவரது கணவா் செல்லப்பா ஆகிய இருவரும் கண்ணில் கருப்பு துணிக்கட்டி வந்து சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலாவிடம் புகாா் மனு கொடுத்தனா். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் , உரிய விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com