ஊராட்சித் தலைவா் காா் சேதம்: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே ஊராட்சித் தலைவா் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே ஊராட்சித் தலைவா் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்தவா் நல்லதம்பி (47). கருங்கடல் ஊராட்சித் தலைவரான இவா், கடந்த வாரம் காரில் சாத்தான்குளம் வந்து ஊா் திரும்புகையில், ஊராட்சி 9ஆவது வாா்டு உறுப்பினா் பூங்கா பிரபாகரன் உள்ளிட்ட 4 போ் வழி மறித்து, காா் கண்ணாடியை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மோசஸ் மகன் சாத்ராக் கிருபாகரனை (25) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com