பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, வீடுதோறும் சென்று சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.