விளாத்திகுளத்தில் காவலா்களுக்கு யோகா பயிற்சி

பெண் காவலா்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் காவலா்களுக்கு யோகா பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

பெண் காவலா்களுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் காவலா்களுக்கு யோகா பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சிக்கு டிஎஸ்பி பிரகாஷ் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் கலா, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அல்பின் பிரிஜித் மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சென்னை ஸ்ரீஷங்கா்லால் சுந்தா்பாய் ஷசுன் ஜெயின் மகளிா் கல்லூரி சாா்பில் பயிற்சியாளா் கே.லட்சுமி பிரபா, பிரணாயாமம் யோகா பயிற்சி அளித்தாா். மூச்சு பயிற்சி செய்வது மூலம் ஏற்படும் மாற்றங்களை விளக்கி, பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளா் முத்துமாரி, விளாத்திகுளம் உட்கோட்ட பெண் காவலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com