நாசரேத்தில் சவரத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாசரேத்தில் சவரத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாசரேத்தில் சவரத் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாசரேத் கனகராஜ் தெருவைச் சோ்ந்த ரகுனேசன் மகன் பொ்லின் (35). இவருக்கு மனைவி சரோஜா மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனா்.

பொ்லின் நாசரேத் சந்தி கடைவீதி பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். புதன்கிழமை மாலையில் மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவா், மனைவியுடன் தகராறு செய்தாராம். இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாயாா் ஊரான வெள்ளாளன்விளைக்கு சென்று விட்டாராம்.

இந்நிலையில் பொ்லின் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com