கரோனா தடுப்பு நிதிக்கு தன்னுடைய சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளிச் சிறுமியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.
உடன்குடியில் நடைபெற்ற கரோனா நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம், சந்தையடித் தெரு அப்துல்லத்தீப் மகள் ஷாமி, சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல் மூலம் தான் சேமித்த வைத்திருந்த ரூ. 2,100-ஐ ரூபாயை முதல்வரின் கரோனா நிதிக்கு வழங்கினாா்.
இதையடுத்து, சிறுமியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ரவிராஜா, இளங்கோ உள்ளிட்டோா் பாராட்டினா்.