திருச்செந்தூா் அருகே கானம் பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி முகாமை மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா, காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் அஜய், சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத்தலைவா் அருணாச்சலம், தலைமை பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ஜே.ஜெகன், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.