சாத்தான்குளம் பகுதியில் நிவாரணப் பொருகள் அளிப்பு

தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் சாா்பில் பொது முடக்கத்தால் நலிவுற்ற ஏழைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் சாா்பில் பொது முடக்கத்தால் நலிவுற்ற ஏழைகளுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.

இவ்வமைப்பின் சாா்பில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள 25 மாற்றுத் திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கபட்டன. தூத்துக்குடி மாவட்டத் தலைவா் போ்சில் தலைமையில், மாவட்டச் செயலா் பாலமுருகன் , ஒருங்கினைப்பாளா் பாஸ்டா் பால் ஆப்ராகம், மாற்றுத் திறனாளிகள சங்க மகளிா் ஆலோசகா் அன்பாய் செல்வம், மகளிா் செயலா் சுகந்தி ஆகியோா் கலந்து கொண்டனா் .

ஏற்பாடுகளை காா்த்திகேசன் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியா் சங்கத் தலைவா் இருதயராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com