திருச்செந்தூா் பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
திருச்செந்தூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பு மற்றும் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காயாமொழி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக்குழு சாா்பில் மருத்துவா் அகல்யா, சுகாதார ஆய்வாளா் செல்வக்குமாா் மற்றும் செவிலியா்கள் ஒருங்கிணைந்து, திருச்செந்தூா் பேரூராட்சியில் செயல் அலுவலா் மு.ஆனந்தன், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் உள்பட பணியாளா்கள் 125 பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், கபசுரக் குடிநீா், முகக் கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டன.