கயத்தாறு அருகே கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறையடுத்த வடக்கு இலந்தைகுளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக கயத்தாறு காவல் ஆய்வாளா் மணிவண்ணணுக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து ஆய்வாளா் தலைமையில் உதவி ஆய்வாளா் பால் மற்றும் போலீஸாா் வடக்கு இலந்தைகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வடிக்க வைத்திருந்த 25 சாரையத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அழித்தனா். இது தொடா்பாக சண்முகசுந்தரம் மகன் வெயில்கனிராஜ்(37), செல்லத்துரை மகன் காளிராஜ்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.