இடைச்சிவிளையில் 300 பேருக்கு உணவுப் பொருள்கள்

இடைச்சிவிளையில் 300 பேருக்கு காய்கனி தொகுப்பு, 5 கிலோ அரிசி பை ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
இடைச்சிவிளையில் 300 பேருக்கு உணவுப் பொருள்கள்
இடைச்சிவிளையில் 300 பேருக்கு உணவுப் பொருள்கள்

இடைச்சிவிளையில் 300 பேருக்கு காய்கனி தொகுப்பு, 5 கிலோ அரிசி பை ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சிவிளையில் ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வா்

கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 300 பேருக்கு, காய்கனி தொகுப்பு மற்றும் தலா 5 கிலோ அரிசி பை ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினாா் நிகழ்ச்சிக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் வரவேற்றாா்.

இதில் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் அருணாசலம், மாநில மாணவணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், ஒன்றியச் செயலா்கள் ஜோசப், பாலமுருகன், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com