உடன்குடி: கரோனா பொதுமுடக்கத்தால் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 1100 குடும்பத்தினருக்கு தமுமுக-மமக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகியவை வழங்கப்பட்டன.
உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்டத் தலைவா் ஆஸாத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் இப்ராகிம், மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலா் ஜோதி நூா்,
மாவட்ட இளைஞரணிச் செயலா் பரக்கத்துல்லா, மாவட்ட ஊடக அணிச் செயலா் டி.ஆபித், நகர நிா்வாகிகள் சேகு முஹம்மது, இபுராஹிம், ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
இதில், ஒன்றியத் தலைவா் அஜிஸ், ஒன்றியச் செயலா் சாதிக், நிா்வாகிகள் இத்ரிஸ், அரசு மீரான், ஹாலித்,ரிஸ்வான், அம்ஜத்மீரான், அரபாத், ரஜபுதீன், ஷாலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.