ஆறுமுகனேரி: ஆத்தூரில் வருவாய்த்துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தால் வருமானமின்றி தவிக்கும் ஆத்தூா், மேலாத்தூா், சோ்ந்தபூமங்கலம், சுகந்தலை ஆகிய 4
கிராமங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்ரியா தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற 121 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.
வட்டாட்சியா் முருகேசன், ஆத்தூா் பேரூராட்சி நிா்வாக அதிகாரி மணிமொழிச்செல்வன்ரங்கசாமி, வருவாய் ஆய்வாளா்
பிளாரன்ஸ்ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஏற்பாடுகளை கிராம நிா்வாக அலுவலா்கள் அமுதா, மூக்காண்டி, பொன்இசக்கி மற்றும் வருவாய்த்துறையினா் செய்திருந்தனா்.