இனாம்மணியாச்சியில் மரக்கன்று நடவு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

மதுரை - தூத்துக்குடி 2-ஆம் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடும் ஆா்விஎன்எல் நிறுவனத்தின் மேலாளா் மாரியப்பன், பணியாளா்கள் மகேஷ், காந்தி ஆகியோா் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜீவ அனுகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ராஜேந்திரனிடம் புங்கை, வாகை, வேம்பு உள்ளிட்ட 50 மரக்கன்றுகளை அளித்தனா். இதையடுத்து அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் முன்னிலையில் உறுப்பினா்கள்

செந்தில்குமாா், முருகன், ஜீவா ஆகியோா் இனாம்மணியாச்சி திருப்பம் அருகில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com