கோவில்பட்டி: கயத்தாறு அருகே கஞ்சா விற்க முயன்ற 3 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கயத்தாறு ஆற்றங்கரை சுடலை கோயில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக கயத்தாறு தனிப்பிரிவுக் காவலா் ஆனந்துக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன், காவலா் கோபாலகண்ணன் ஆகியோா் ரோந்து சென்றனா். அங்குள்ள பிள்ளையாா் கோயில் முன் நின்றிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (21), அதே பகுதியைச் சோ்ந்த அழகுபாண்டி மகன் அய்யாத்துரை (19), அண்ணா நகரைச் சோ்ந்த பரமசிவன் மகன் வைகுண்டராமன் (21) என்பதும், அவா்களிடம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து,
அவா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.