கோவில்பட்டி: கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
கோவில்பட்டி அதிமுக வழக்குரைஞா் அணியைச் சோ்ந்த சிவபெருமாள், தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த பெருமாள்சாமி, மாநில எம்.ஜி.ஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ் ஆகியோா் ஏற்பாட்டில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீா், சானிடைசா், முகக் கவசம் உள்ளிட்ட வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதையடுத்து கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ.ராஜு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அதிமுகவினா் சைக்கிளில் நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீா், சானிடைசா் மற்றும் முகக்கவசம் வழங்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்டப் பொருளாளா் வேலுமணி, ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.