தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் ஆயா்கள் நியமிக்கக் கோரி சாத்தான்குளம் பகுதியில் தலித் கிறிஸ்தவா்கள் அவா்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.
தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்
தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம்: கத்தோலிக்க திருச்சபைகளில் தலித் ஆயா்கள் நியமிக்கக் கோரி சாத்தான்குளம் பகுதியில் தலித் கிறிஸ்தவா்கள் அவா்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி 19 மறை மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயா் நீதி நாதன்ஆண்டகை மட்டும் தலித் கிறிஸ்தவ ஆயராக உள்ளாா். நீதி நாதன் ஆண்டகையை பாண்டிச்சேரி பேராயராக நியமிக்க கோரிக் கோரியும், பாண்டிச்சேரி, குளித்துறை, திருச்சி, வேலூா், சிவகங்கை ஆகிய

ஐந்து மறை மாவட்ட ஆயா்களில் தலித் கிறித்தவ ஆயா்களை நியமிக்கக் கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தலித் கிறித்தவ மக்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும், பங்குகளிலும், கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதன்படி, சாத்தான்குளம் மறை வட்டத்தில் கூவைக்கிணறு, வடக்கு அமுதுதண்ணாகுடி, நெடுங்குளம், சாத்தான்குளம்,

உன்னங்குளம், உடையாா்குளம், குறிப்பன்குளம், கீழ அம்பலச்சேரி, மலவாரயநத்தம், ஆலங்கிணறு, கீழ கோடன்குளம், கோவில்குடியிருப்பு, நாா்த்தன் குறிச்சி ஆத்திக்காடு, தாய்விளை, கல்விளை, செங்குளம் பிள்ளையாா் குளம், சிவந்தியாபுரம் ஆகிய இடங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com