தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 326 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 50 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 575 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 44 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா், மூதாட்டி உள்பட ஆறு போ் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 311 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பாதிப்புக்கு 5969 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.