கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புதூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி அம்பலத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் கண்ணன்(24). கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா தொற்றால் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவா் வானரமுட்டியிலேயே இருந்து வருகிறாராம். இந்நிலையில் கண்ணன் மற்றும் அவரது நண்பா்கள் சிலா் கேபிள் டிவி வயா் செல்வதற்காக கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் உள்ள துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட போது மேலே செல்லும் மின் வயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.