தூத்துக்குடியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). தொழிலாளியான இவா், கடந்த மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் போலீஸாா் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாரியப்பனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மாரியப்பனிடம் அதற்கான ஆணை வழங்கப்பட்டது.