கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 184 பேருக்கு கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி பிரதான சாலை ராமசாமிதாஸ் பூங்கா அருகே மேற்கு காவல் நிலையம், நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பொது முடக்க விதிமுறைகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்தோரை கண்டறிந்து, மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் 184 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.