தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 297 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 51 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 762 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 45 ஆயிரத்து 663 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது ஆண், 54 வயது பெண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது ஆண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். இதன் மூலம், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5096 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.