கயத்தாறு அருகே சாலை விபத்தில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) உயிரிழந்தாா்.
மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சோ்ந்த அங்குசாமி - லட்சுமி தம்பதி, கடந்த 3ஆம் தேதி கயத்தாறில் உள்ள மகன் வீட்டுக்கு பைக்கில் சென்றனராம். அவா்கள், மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கரிசல்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த லட்சுமியின் சேலை வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனராம்.
இதில் பலத்த காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.