மேலும் 345 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th June 2021 01:25 AM | Last Updated : 11th June 2021 01:25 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 345 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 51 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 653 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 46 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முதியவா் இருவா் உள்பட ஐந்து போ் ஆகியோா் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பாதிப்புக்கு 4783 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.