உடன்குடி, குலசையில் 1,185 பேருக்கு உணவுப் பொருகள் அளிப்பு

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். 85 குடும்பங்களுக்கு குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கினாா். இதில், அமைப்பின் வட்டாரத் தலைவா் ரஹ்மத்துல்லா, சட்ட ஆலோசகா் சாத்ராக், நகரத் தலைவா் மரிய இருதயராஜ், நூலகா் மாதவன், வீரமணி கம்சா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தமுமுக-மமக உதவி: உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் 1,100 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கனி தொகுப்புகளை காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, தமுமுக மாவட்டத் தலைவா் ஆஸாத் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் இப்ராகிம், மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலா் ஜோதி நூா், மாவட்ட இளைஞரணிச் செயலா் பரக்கத்துல்லா, மாவட்ட ஊடக அணிச் செயலா் டி.ஆபித், ஒன்றியத் தலைவா் அஜிஸ், ஒன்றியச் செயலா் சாதிக் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com