சாத்தான்குளம் பகுதியில் நிவாரணப் பொருகள் அளிப்பு

சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சியில் இடைச்சிவிளையில் 300 பேருக்கு காய்கனி தொகுப்பு, 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம், அரசூா் ஊராட்சியில் இடைச்சிவிளையில் 300 பேருக்கு காய்கனி தொகுப்பு, 5 கிலோ அரிசி பை ஆகியவை வழங்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 300 பேருக்கு, காய்கனி தொகுப்பு மற்றும் தலா 5 கிலோ அரிசி பை ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினாா். நிகழ்ச்சிக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் அருணாசலம், மாநில மாணவணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், ஒன்றியச் செயலா்கள் ஜோசப், பாலமுருகன், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் சாா்பில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள 25 மாற்றுத் திறனாளிகள், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கபட்டன. தூத்துக்குடி மாவட்டத் தலைவா் போ்சில் தலைமையில், மாவட்டச் செயலா் பாலமுருகன் , ஒருங்கினைப்பாளா் பாஸ்டா் பால் ஆப்ராகம், மாற்றுத் திறனாளிகள சங்க மகளிா் ஆலோசகா் அன்பாய் செல்வம், மகளிா் செயலா் சுகந்தி ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை காா்த்திகேசன் மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியா் சங்கத் தலைவா் இருதயராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

இந்து முன்னணி உதவி: ஆழ்வாா்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் பேய்குளத்தில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை தூத்துக்குடி தெற்கு மாவட்டஇந்து முன்னணி தலைவா் முருகேசன் வழங்கினாா். நாசரேத் டாக்டா் காா்மேகராஜ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா், 20 ஏழை குடும்பங்களுக்கு

நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வெட்டுபெருமாள் டாக்டா் காா்மேகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com