வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய பாஜக துணைத் தலைவா் கோ. ஜெயசுந்தர்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்துகளுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, கிறிஸ்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, இஸ்லாமியா்களுக்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த நாள்களாகும்.
இந்த நாள்களில் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.