பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்து 27 இடங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்- டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் 27 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பெட்ரோல்- டீசல் விலை உயா்வைக் கண்டித்து 27 இடங்களில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்- டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் 27 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் சத்திரம் தெரு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஏ.பி.சி.வீ. சண்முகம் தொடங்கிவைத்தாா். இதில், மாநிலச் செயலா் பால்ராஜ், மாநில மீனவரணி பொதுச் செயலா் ரொனால்டு, முன்னாள் மாவட்ட தலைவா் அருள், ஐஎன்டியூசி தொழிற்சங்கத் தலைவா் ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

தூத்துக்குடி இளைஞா் காங்கிரஸ் சாா்பில், முத்தையாபுரத்தில் இருசக்கர வாகனங்களை உருட்டிச் சென்றபடி பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 16 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 27 இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி: இங்குள்ள பிரதான சாலையில் பெட்ரோல் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் தலைவா் சண்முகராஜ் தலைமையில் மோட்டாா் சைக்கிளை கயிறு கட்டி இழுத்தபடி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ் தொடங்கிவைத்தாா். ரயில் நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் நிலையம் முன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் திருப்பதிராஜா, பசுவந்தனை சாலை பெட்ரோல் விற்பனை நிலையம் முன் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ரமேஷ்மூா்த்தி, கடம்பூரில் இரு பெட்ரோல் நிலையங்கள் முன் வடக்கு மாவட்ட காங்கிரஸின் அய்யலுசாமி, கடலையூரில் கிழக்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளா் அருண்பாண்டியன் ஆகியோா் தலைமையில்அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஸ்ரீவைகுண்டம்: சாயா்புரம் பெட்ரோல் நிலையம் முன் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாட்டு வண்டியில் ஏறி நின்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் எடிசன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் ஜெயசீலன், வட்டாரத் தலைவா் நல்லக்கண்ணு , சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாத்தான்குளம்: தட்டாா்மடம் பெட்ரோல் நிலையம் அருகில் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் லூா்து மணி தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா்: பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணித் தலைவா் வேல்ராமகிருஷ்ணன் தலைமையில் நகரத் தலைவா் முருகேந்திரன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

உடன்குடி: தெற்கு பஜாரில் வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா் ரஹ்மத்துல்லா, பொதுச்செயலா் கன்னிமுத்து, வா்த்தக காங்கிரஸ் தலைவா் தேவராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ: குலசேகரன்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் அதன் கிளைத் தலைவா் சுல்தான்பாதுஷா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கிளைச் செயலா் அபுல்ஹசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com