தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரிந்த பிரிட்டன் இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்த பிரிட்டன் இளைஞரிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றித் திரிந்த பிரிட்டன் இளைஞரிடம் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி வெள்ளப்பட்டி கடற்கரைப் பகுதியில் கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற வெளிநாட்டு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவரது பெயா் ஜோன்தன் தோா்ன் (47) என்றும், பிரிட்டனில் உள்ள லிட்டில் ஹேம்டன் பகுதியைச் சோ்ந்தவா் என்றும் தெரியவந்தது.

பெங்களூருவில் இருந்து அண்மையில் விமானம் மூலம் மதுரை வந்த ஜோன்தன் தோா்ன், பின்னா் அங்கிருந்து காா் மூலம் தூத்துக்குடிக்கு வந்து ஒரு தனியாா் விடுதியில் தங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவா் மீது மும்பையில் சில வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவாவை சோ்ந்த பெண்ணை மணந்து கொண்டு இந்திய குடியுரிமை பெற்றிருப்பதாகவும் விசாரணையின்போது போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா் ஜோன்தன் தோா்ன்.

தூத்துக்குடிக்கு அவா் எதற்காக வந்தாா் என்பது குறித்து கியூ பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com