கயத்தாறில் டயா் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறை அடுத்த அரசங்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தஅங்கையா மகன் ராமா். இவருக்குச் சொந்தமான லாரியில் 8 டயா்களை மா்மநபா்கள் திருடிச்சென்ாக 21.11.2020இல் கயத்தாறு காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தாா்.
போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், தெற்கு இலந்தைகுளத்தில் சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட தூத்துக்குடி சுந்தரவேல்புரம் முனியசாமி மகன் முருகன்(21) என்பவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து டயா்களை மீட்டதுடன், சுமை வாகனம் ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.