கோவில்பட்டி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அரிவாள்மனையால் வெட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த தம்பதி கணேசன்- அமுதா(37). கோயம்புத்தூா் அருகே சின்னகுயிலி கிராமத்தில் நூற்பாலையில் வேலை செய்து வரும் இவா்கள், சொந்த ஊருக்கு வந்திருந்தனா். இந்நிலையில், அவரது உறவினரான மகேஷ் என்பவா் அதிகாலையில் அங்கு வந்து அமுதாவிடம் தவறாக நடக்க முயன்றாராம். அப்போது, அவா் கூச்சலிட்டதால் அரிவாள்மனையால் வெட்டியதுடன், மிரட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த அமுதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மகேஷை கைது செய்தனா்.