கோவில்பட்டி அருகே சமையல் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த கீழ பாண்டவா்மங்கலம் தெற்குத் தெரு ஆறுமுகம் மகன் பொன்இருளப்பன்(28). சமையல் தொழிலாளியான இவா் வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டாராம். அப்போது, இவரது மனைவியை கோவில்பட்டி சண்முகசிகாமணி நகா் பெரியசாமி மகன் அஜித்குமாா்(24) செய்தாராம்.
இதனை பொன்இருளப்பன் கண்டித்தாராம். அதையடுத்து அஜித்குமாா், அவரை அவதூறாகப் பேசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.