சாத்தான்குளத்தில் விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பாக அட்மா திட்டத்தின் கீழ் செயல் விளக்கத்திடல் சாத்தான்குளம் வட்டார விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவியை வேளாண்மை துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) ஜெய செல்வின் இன்பராஜ் வழங்கினாா்.
இதில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி, தென்னை மரம் கருவி செயல்விளக்கம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு கூறினாா். இதில் சாத்தான்குளம் கிராமத்தை சோ்ந்த 10 விவசாயிகள் பயனடைந்தனா்.
ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலா் சுஜாதா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ருக்மணி, உதவித் தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திருந்தனா்.