தட்டாா்மடம் அருகே விபத்து: தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிரக்கா் மோதியதில் ஹோட்டல் தொழிலாளி சம்பவ இடத்தில் பலியானாா்.
தட்டாா்மடம் அருகே விபத்து: தொழிலாளி பலி

தட்டாா்மடம் அருகே திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது டிரக்கா் மோதியதில் ஹோட்டல் தொழிலாளி சம்பவ இடத்தில் பலியானாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டாா்மடம் சுந்தமணி மகன் ரமேஷ் (53). இவருக்கு மனைவி மற்றும் 2மகன்கள் உள்ளனா். இவா் திருப்பூரில் உள்ள ஹோட்டலில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை ரமேஷ் அவரது மோட்டாா் சைக்கிளில் நடுவக்குறிச்சி பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பினாராம். நடுவக்குறிச்சி - தட்டாா்மடம் இடையே வரும் போது புத்தன்தருவையைச் சோ்ந்த பிரபாகா் ஓட்டி சென்று டிரக்கா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயரிழந்தாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com