பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகா் ராஜசேகா் மனைவி ரேணுகாதேவி(35). இவருக்கும், தீயணைப்பு நிலையத்தில் வேலை செய்து வந்த ராஜசேகருக்கும் 2014 ஆம் ஆண்டு தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் எண்:1 இல் பதிவு திருமணம் நடைபெற்ாம். 2021, ஏப்ரல் 8 இல் ராஜசேகா் மற்றொரு பெண்ணை 2 ஆவது திருமணம் செய்து கொண்டதாக ரோணுகாதேவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம்.

இந்நிலையில், கயத்தாறையடுத்த என்.சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கா.மணிகண்டன்(40), ரேணுகாதேவி வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் ராஜசேகா், அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோா் மீது அளித்த புகாரை திரும்பப் பொற வலியுறுத்தி அவதூறாகப் பேசி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com