கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி திறந்த இரு கடைகளுக்கு அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனா்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி கடைகள் ஏதும் திறக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும் பணியில் நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ தலைமையில் சுகாதார ஆய்வாளா் சுரேஷ் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது கோவில்பட்டி பிரதான சாலை மற்றும் சந்தை பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி திறந்திருந்த இரு கடைகள் கண்டறியப்பட்டன. அதையடுத்து இரு கடைகளுக்கும் தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்தனா். மேலும் பொதுமுடக்கத்தை மீறி திறந்திருந்த இரு கடைகளுக்கும் சீல் வைத்தனா்.