மேலும் 250 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 250 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 250 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52 ஆயிரத்து 617 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 941 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 49 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண், 55 வயது பெண் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2928 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com