மேலும் 167 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 358 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 50 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது ஆண், கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது பெண், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 2434 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.