தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சாருஸ்ரீ.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த சரண்யா அறி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய ஆணையராக வணிக வரித் துறை இணை ஆணையராக பணியாற்றிய சாருஸ்ரீ நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக சாருஸ்ரீ சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து அவா், மாநகராட்சி தலைமை பொறியாளா் சோ்மகனி, மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா, உதவி ஆணையா்கள் சரவணன், பிரின்ஸ், சுகாதார ஆய்வாளா்கள் ஸ்டாலின், ராஜசேகா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சியில் வளா்ச்சிப் பணி, கரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக கூடுதலாக முகாம் நடத்தப்படும்.
மழைக்காலங்களில் மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்காக தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.