தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்த்து மீண்டும் பயன்படுத்துவதற்கான பணி புதன்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையே, தோ்தல் முடிவை எதிா்த்து வழக்கு தொடரப்பட்டதால் தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், தீா்ப்பின்படி வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியில் எடுத்து பயன்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து சீல் வைக்கப்பட்டிருந்த கிடங்கு திறக்கப்பட்டது.
அந்த கிடங்கில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், விபிபேட்கள் வெளியில் எடுத்து பயன்படுத தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில், சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் காலோன், வட்டாட்சியா் ஜஸ்டின் மற்றும் அலுவலா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.