சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவைத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ல இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். இதில், பேரவைத் தலைவியாக சுதா்ஷினிராஜம்மாள், செயலராக சுகுமாரி, நுண்களை மன்றச் செயலராக சகாய ரேஷ்மா, சமூக சேவைக் குழு செயலராக-ஆன்சி மைக்கேல் சுவீட்டலின், கல்லுரி மலா் செயலராக ஜேப்ரின் பிறீஷி, விளையாட்டுத் துறைச் செயலராக அபினயா, தமிழ் மன்ற செயலா் சுரேகா, ஆங்கில இலக்கிய மன்றம் மது கீா்த்திகா, பி. பி. ஏ. மன்ற செயலா் மாதவி, வணிகவியல் துறை மன்ற செயலா் திவ்யா, கணினி அறிவியல் துறை மன்ற செயலா் காா்த்திகா, முதுகலை உறுப்பினராக செல்வ மலா் ஆகியோா் பதவி ஏற்றனா். கல்லூரி முதல்வா் மாணவிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.
இதில் சாத்தான்குளம் கல்வி கழக நிறுவனா் கவிஞா் பெ.மு., சுப்பிரமணியன், துணைத் தலைவா் ரா. லட்சுமி நாராயணன் , உறுப்பினா் இரா. ஜெய பிரகாஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் த.செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியைப் பேராசிரியா்கள் சீதாலெட்சுமி, பிரசேல் ஆகியோா் தொகுத்து வழங்கினா். வணிகவியல் துறை பேராசிரியா் ஜெஸி வரவேற்றாா். மாணவப் பேரவைத் தலைவி சுதா்ஷினி ராஜம்மாள் நன்றி கூறினாா்.