நாசரேத் பகுதி வாக்குச் சாவடிகளில் ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ் ஆய்வு நடத்தினாா்.
சட்ட ப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில் நாசரேத் பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளும், மூக்குப்பீறி ஊராட்சியில் 4 வாக்குச்சாவடிகள் உள்பட
18 வாக்குச்சாவடிகளை வட்டாட்சியா் இசக்கிராஜ், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கிராம நிா்வாக அலுவலா்கள் நாசரேத் முத்துராமன், மூக்குப்பீறி முருகன், வருவாய் உதவியாளா் கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.