நாசரேத் வாக்குச் சாவடிகளில் வட்டாட்சியா் ஆய்வு

நாசரேத் பகுதி வாக்குச் சாவடிகளில் ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ் ஆய்வு நடத்தினாா்.

நாசரேத் பகுதி வாக்குச் சாவடிகளில் ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ் ஆய்வு நடத்தினாா்.

சட்ட ப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில் நாசரேத் பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளும், மூக்குப்பீறி ஊராட்சியில் 4 வாக்குச்சாவடிகள் உள்பட

18 வாக்குச்சாவடிகளை வட்டாட்சியா் இசக்கிராஜ், பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கிராம நிா்வாக அலுவலா்கள் நாசரேத் முத்துராமன், மூக்குப்பீறி முருகன், வருவாய் உதவியாளா் கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com