ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம்

ஆசிரியா்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் நாசரேத் பிரகாசபுரம் எஸ்.டி.ஏ. ஜேம்ஸ் மெமேரியல் பள்ளியில் நடைபெற்றது.
தடுப்பூசி போடும் முகாமில் ஊசி போட்டுக் கொண்டாா் வட்டாரகல்வி அலுவலா் மீனாட்சி.
தடுப்பூசி போடும் முகாமில் ஊசி போட்டுக் கொண்டாா் வட்டாரகல்வி அலுவலா் மீனாட்சி.

ஆசிரியா்களுக்கான கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு முகாம் நாசரேத் பிரகாசபுரம் எஸ்.டி.ஏ. ஜேம்ஸ் மெமேரியல் பள்ளியில் நடைபெற்றது.

முகாமிற்கு திருச்செந்தூா் மாவட்ட கல்வி அலுவலா் சின்னராசு தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா்கள் ரோஸ்லின் ராஜம்மாள், மீனாட்சி, ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வா் பிராங்கிளின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.. தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலா் பாா்த்தீபன், கரோனா தடுப்பூசி குறித்துப் பேசினாா். திருச்செந்தூா் மாவட்ட கல்வி ஆய்வாளா் ஆனந்தகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். முகாமில் 67 போ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com