திருச்செந்தூா் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் ராகேஷ் தீபக் தலைமையில் தோ்தல் பறக்கும்படை அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பேரவைத் தோ்தலை நோ்மையான முறையில் நடத்துவது, வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிப்பது,
பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்பு குழு, செலவினக் கணக்கு குழு உள்ளிட்ட குழுக்களை வழி நடத்தும் பாா்வையாளா்களாக ஐஏஎஸ்அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளின் பாா்வையாளா் ராகேஷ் தீபக் தலைமையில் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொண்டனா். மேலும் தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் 94899 47508 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தோ்தல் பாா்வையாளா்
தெரிவித்தாா். கூட்டத்தில் வட்டாட்சியா்கள் முருகேசன், இசக்கிராஜ், துணை வட்டாடசியா்கள் பாலசுந்தரம், சுந்தர ராகவன்,
அதிகாரிகள் கலந்து கொண்டனா்.