முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 14th March 2021 02:52 AM | Last Updated : 14th March 2021 02:52 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,387 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் இருவா் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை கரோனாவில் இருந்து மீண்டோா் எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 18 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.