தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தோ்தல் விழிப்புணா்வு முகாம் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்கியின் மேலாண்மை இயக்குநா் சிவகாமி தலைமை வகித்தாா். மண்டல தோ்தல் அலுவலா்கள் சாம் டேனியல் ராஜ், ஜோ சில்வஸ்டா் ஆகியோா் கலந்துகொண்டு நூறு சதவீத வாக்குப் பதிவுக்கான அவசியம் குறித்து விளக்கினா்.
நிகழ்ச்சியில், வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் அருள் சேசு, துணைப் பதிவாளா்கள் ரவீந்திரன், மாரியப்பன், கூட்டுறவு சாா் பதிவாளா் சங்கா், பொதுமேலாளா் சுமதி உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, நோ்மையாக வாக்களிப்பது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.