கோவில்பட்டியில் ரத்த பரிசோதனை முகாம்

கோவில்பட்டியில் லேப் டெக்னிசியன் தின விழாவை முன்னிட்டு முதியோருக்கு ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் லேப் டெக்னிசியன் தின விழாவை முன்னிட்டு முதியோருக்கு ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு தோறும் மாா்ச் 13ஆம் தேதி லேப் டெக்னிசியன் தின விழா அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் சாா்பில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் வெளிச்சம் முதியோா் இல்லத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நலச்சங்க மாநில துணை பொதுச்செயலா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.

தலைவா் கணேசன், செயலா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நலச் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலா் உலகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சங்கக் கொடியை ஏற்றி ரத்த முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து, முதியோா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் நடராஜன், முத்துமுருகன், ஓய்வு பெற்ற மாவட்ட நூலக ஆய்வாளா் பூல்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com