அதிமுக வேட்பாளா் மீது வழக்கு

கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் மீது நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கோவில்பட்டி அதிமுக வேட்பாளா் மீது நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் மாரிமுத்து தலைமையில் அக்குழுவினா் கடந்த 12ஆம் தேதி ஊத்துப்பட்டி குருமலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக சென்ற தமிழக அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கடம்பூா் செ.ராஜு வாகனத்தை சோதனையிட்டபோது, அவா் தன்னை மிரட்டியதாக நாலாட்டின்புதூா் போலீஸில் மாரிமுத்து புகாா் செய்தாா். அதன்பேரில் அதிமுக வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மாரிமுத்து, ஞாயிற்றுக்கிழமை விளாத்திகுளம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்ட சில மணி நேரத்துக்குள் மீண்டும் கோவில்பட்டி தொகுதிக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com